சிறையில் அடைக்கப்பட்ட சம்பத்குமார் சார்பில் ஜாமீன் கேட்டு வக்கீல் மாதவன், கோவை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பாஸ்கரன் மனுவை விசாரித்து சம்பத்குமாருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன்படி, வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பான 12 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பில் இருநபர் ஜாமீன் வழங்க வேண்டும். முக்கியமாக, வெட்டி சாய்க்கப்பட்ட எட்டு மரங்களுக்கு பதிலாக, குற்றம் சாட்டப்பட்ட இன்ஜினியர் வசிக்கும் பகுதியைச் சுற்றி 40 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். கோர்ட் உத்தரவிட்ட 10 நாள்களில் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்க வேண்டும் என நீதிபதி பாஸ்கரன் நிபந்தனை விதித்துள்ளார்.
-நன்றி- தினமலர்.
No comments:
Post a Comment