Friday, March 25, 2011

தறுதலைகள் ...

தறுதலைகள் ...
இதுக்கே இப்படியென்றால்-
கராத்தே தியாகராஜன் குலாம் நபி ஆசாத்தை சந்திக்கவேண்டும்.

ஒருமுறை-தி.மு.க.ஆட்சி கலைக்கப் பட்ட பொழுது-
நான் அறிவாலயம் சென்றேன்.
கலைஞர் பெட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
வெளியில் மு.க.ஸ்டாலினிடம் கருத்து கேட்டேன்.
தலைவர் என்ன சொல்கின்றாரோ அதுதான் 
எங்கள் அனைவரின் கருத்து என்று பதில் அளித்தார்.
சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் இதே கேள்வியைக் கேட்டேன்
- பதிலும் அதே.!
துரைமுருகனிடம் கேட்டேன்-
கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவருக்கு.
"தாலி அறுத்தவன் வீட்டுலதான் தலைக்குத் தல
அம்பலம் பண்ணுவான்- அது காங்கிரஸ் காரன்-
இங்கே தல என்ன சொல்லுதோ அதுதான்
எல்லோரது பதிலும் என்று சொன்னார்.
நான் நேராக அண்ணா.தி.மு.க.அலுவலகம் சென்றேன்.
அங்கெ சேடபட்டி முத்தியா இருந்தார்.
ஆட்சி கலைப்பு பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
என்று கேட்டேன்."அம்மா என்ன சொல்கின்றார்களோ
அதுதான் எங்கள் பதில்" என்று சொன்னார்.

அங்கிருந்து சத்தியமூர்த்தி பவன் சென்றேன்.
வாசலில் நுழைந்தது முதல் ஒவ்வொருவரும்
ஒரு கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.
அனந்தநாயகி ஓடோடி வந்து "ரேஷன் ஒழுங்கின்மை
தி.மு.க.வுக்கு சாவுமணி என்று சொன்னார்.."
தங்கபாலு ஒரு கருத்து சொன்னார்.
திண்டிவனம் ராமமூர்த்தி இன்னொரு கருத்து சொன்னார்.
அன்பரசு மற்றுமொரு கருத்து சொன்னார்.
கருத்து சுதந்திரம் நிறைந்து - கட்டுப்பாடு குறைந்து
துரைமுருகன் சொன்னது போல-
தாலி அறுத்தவன் வீட்ல தலைக்குத் தல அம்பலம் பண்ணுவான்-
அது காங்கிரஸ்காரன்- என்ற வாசகம் சரியாய் இருந்தது.

காங்கிரஸ் ஒரு கட்டுப்பாடு  அற்ற கட்சி.
ஏனனெனில் அதற்க்கு எப்பொழுதுமே
தலைமை சரியாக அமைவதில்லை.
அது ஒரு நண்டுப் பார்டி.
please visit thevarsangam.com

No comments:

Post a Comment